269 உள்ளாட்சி காலியிடங்களுக்கு தேர்தல்:br/முதல் முறையாக மின்னணு வாக்குப் பதிவு
சென்னை:
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 269 உள்ளாட்சி காலியிடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
சிற்றூராட்சி முதல் மாநகராட்சி வரை 488 பதவியிடங்கள் காலியாக இருந்தன. இவற்றுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் 10 பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்பட 219 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து மீதமுள்ள 269 பதவியிடங்களுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications