10 வயது சிறுவன் ஓட்டிச் சென்றbr/கார் மோதி 2 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil


டெல்லி:

10 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற குவாலிஸ் கார் மோதி தாயும், மகனும் படுகாயமடைந்தனர்.

டெல்லியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சிறுவனை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.

மேற்கு டெல்லியில் உள்ள பாஸ்சிம் விகார் பகுதியைச் சேர்ந்தவன் அந்த சிறுவன். 10 வயதே ஆகும் அவன், தனது வீட்டிலிருந்த டோயோட்டா குவாலிஸ் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளான்.

தாறுமாறாக ஓட்டிச் சென்ற அவன், மினவாலா பகுதியில் சென்றபோது சாலையோரம் சென்ற ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை மீது மோதியுள்ளான்.

இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் உடனடியாக சஞ்சய் காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைந்து வந்த போலீஸார் அந்த சிறுவனைக் கைது செய்து கொண்டு சென்றனர்.

10 வயது சிறுவன் கார் ஓட்டிச் சென்று இருவரை படுகாயப்படுத்திய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+