அபாய கட்டத்தைத் தாண்டினார் சாந்தி!
தஞ்சாவூர்:
பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தடகள வீராங்கனை சாந்தி, தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் தட்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. தடகள வீராங்கனையான இவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதையடுத்து அவருக்கு தமிழக அரசு ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான டிவியைப் பரிசாக அறிவித்தது. இந்த நிலையில் பெண்மைக்குரிய ஹார்மோன் சாந்தியிடம் இல்லை என்று புதிய சர்ச்சை எழுந்தது. இதன் தொடர்ச்சியாக சாந்தியின் பதக்கமும் பறிக்கப்பட்டது.
இருப்பினும் சாந்தியின் திறமையை அங்கீகரித்த முதல்வர் கருணாநிதி அவருக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை வழங்கி சாந்தியை கெளரவித்தார். பாலின சர்ச்சைக்குப் பின்னர் அதிக வெளியுலக நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்தார் சாந்தி.
இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டையில் உள்ள ஒரு தடகள வீரர் வீட்டுக்கு சாந்தி சென்றிருந்தார். பின்னர் திரும்பிய அவர் பூச்சி மருந்தை சாப்பிட்டு விட்டார்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சாந்தி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டாக்டர்கள் ஆலோசனைப்படி அவர் தஞ்சை அரசினர் சரபோஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தஞ்சை மருத்துவனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயராஜ்குமார் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஜயராஜ்குமார் பேசுகையில், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் சாந்தி உள்ளார். தற்போது முழுமையாக உடல் நலம் தேறி வருகிறார். சிறப்பு டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. நல்ல நிலையில் அவர் தற்போது இருக்கிறார் என்றார்.
இதற்கிடையே, சாந்தி தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications