விபச்சார விடுதியான அனாதை இல்லம்;br/கருக் கலைப்பும் நடந்த அநியாயம்!
திருநெல்வேலி:
நெல்லையில் விபச்சாரம் நடத்தப்பட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள தச்சநல்லூர் அன்னை தெரசா அனாதை இல்லத்தில், விபச்சாரத்தில் ஈடுபட்டு கர்ப்பமான பெண்களுக்கு கருக்கலைப்பும் நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தச்சநல்லூரில் உள்ள அன்னை தெரசா அனாதை இல்லம் என்ற ஒரு ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் சென்றது. இதையடுத்து அங்கு போலீஸார் அதிரடி ரெய்டு நடத்தினர்.
இதில் விபச்சாரம் நடந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அனாதை இல்லத்தை நடத்தி வந்த ஆரோக்கிய மேரி மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட உஷா, கலைவாணி மற்றும் புரோக்கராக செயல்பட்ட பாலு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் ஒப்புக்காக தங்க வைக்கப்பட்டிருந்த 8 சிறுவர்கள் மீட்கப்பட்டு, சரணாலயம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆரோக்கிய மேரி நடத்தி வந்த விபச்சார இல்லம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனாதை இல்லத்தை பெயரளவுக்கு மட்டுமே நடத்தி வந்த ஆரோக்கிய மேரி முழுக்க முழுக்க பாலியல் தொழிலையே செய்துள்ளார்.
பல இளம்பெண்களை காட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். இந்தத் தொழிலில் ஈடுபட்டதன் மூலம் பல தொழிலதிபர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் சொல்லும் இடங்களுக்கு இளம்பெண்களை அனுப்பி வைத்தார்.
தொழிலதிபர்களுடன் உல்லாசமாக இருக்கப் போகும் பெண்கள், அனாதை இல்லத்திற்கென பெருந் தொகையையும் அவர்களிடமிருந்து கேட்டு வாங்கிக் கொள்வார்களாம்.
ஆரோக்கிய மேரிக்கு கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி போன்ற பகுதிகளிலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். தொழிலதிபர்கள் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கும்போது அவர்களுக்கு தெரியாமல் புளூபிலிம் எடுத்துள்ளார். அதை அவர்களிடம் காட்டி பணமும் பறித்துள்ளாராம்.
இதற்காக அனாதை இல்லத்தில் உள்ள படுக்கை அறையில் நவீன கேமராவைப் பொருத்தி உள்ளார். விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு கர்ப்பம் ஆன












Click it and Unblock the Notifications