மணல் திருட்டுக்கு உதவிய விஏஓ சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் மணல் திருட்டுக்கு உதவிய கிராம நிர்வாக அதிகாரி உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சேரன்மகாதேவி பகுதியில் திருட்டுத் தனமாக மணல் அள்ளுவதாக அப்பகுதி சப்-கலெக்டருக்கு புகார் வந்தது. இதனால் அப்பகுதியில் கடந்த 4ம் தேதி சப்-கலெக்டர் பாலாஜி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது அனுமதி (லைசென்ஸ்) காலம் முடிந்த பிறகும் போலி ரசீது முலம் திருட்டுத்தனமாக கடந்த 5 மாதங்களாக செயல்பட்ட மணல் குவாரிகளை சப்-கலெக்டர் பாலாஜி கண்டுபிடித்தார். அங்கு 594 யூனிட் மணல் திருட்டுதனமாக அள்ளியது தெரியவந்தது.

இதுகுறித்து நடந்த சோதனையில் 6 லாரிகள், ஒரு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் விஏஓ ஆதி நாராயணன், தலையாரிகள் முருகன், பொன்னையன் ஆகிய மூவரும் மணல் திருட்டு குறித்து உரிய தகவல் கொடுக்காதது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் சப்-கலெக்டர் பாலாஜி சஸ்பெண்ட் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+