திருவாரூரில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை:
விவசாயிகளுக்கு பயிர்க் கடனை முறையாக வழங்கக் கோரி அதிமுக சார்பில் நாளை திருவாரூரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக ஆட்சியில் விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க்கடனை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்காமல் பல்வேறு பொய்யான காரணங்களை காட்டி சிறு மற்றும் குறு விவசாயிகள் தட்டிக்கழிக்கப்பட்டும், அலைக் கழிக்கப்பட்டும் வருகின்ற அவலம் தொடர்ந்து நிலவி வருகிறது.
விவசாயிகளின் துயரத்தை துடைக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க்கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் எவ்வித காரணமும் கேட்காமல் உடனடியாக வழங்க வலியுறுத்தியும், விவசாயத்திற்குத் தேவையான விதை நெல் மற்றும் உரம் ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்தியும்,
அதிமுக விவசாயப் பிரிவுச் செயலாளர் துரை.கோவிந்தராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications