இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.2 கோடிbr/மோசடி செய்தவர் திருப்பூரில் கைது
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ. 2 கோடி அளவுக்கு மோசடி செய்த நபர் திருப்பூரில் சிக்கினார்.
ஆந்திர மாநிலம், செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத் (50). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் மேலாளராகப் பணிபுரிந்தார்.
இந்நிலையில் ரூ.2 கோடி மோசடி செய்ததாக அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்தது. ஆனால், இந்த வழக்கில் ரவீந்தரநாத் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் தலைமறைவானார்.
கடந்த 4 ஆண்டுகளாக சி.பி.ஐ. ரவீந்திரநாத்தை தேடி வந்தது. இந்த நிலையில், அவர் திருப்பூருக்கு தப்பி வந்து, தொழில் நிறுவனம் நடத்தி வருவது சிபிஐக்கு தெரிய வந்தது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விரைந்து வந்து ரவீந்திரநாத்தைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications