விளையாட்டு பயிற்சி மையம் மாற்றம்;br/பொன்.ராதா சாகும் வரை உண்ணாவிரதம்!
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கல்மங்கலத்தில் அமையவிருந்த இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தை (சாய் சாஃப்) நெல்லைக்கு மாற்றுவதை எதிர்த்து அங்கு பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
ராஜாக்கல்மங்கலத்தில் இருந்து சாய் சாஃப் சென்டரை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கூடாது என கோரி பா.ஜ.க, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதன் உச்சகட்டமாக முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மாநில துணை தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
போராட்டத்தை மாநில தலைவர் இல.கணேசன் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், ராஜாக்கல் மங்கலத்தில் விளையாட்டு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார்.
சாகும் வரை உண்ணாவிரதம் என்று கூறினால் அது கோரிக்கை நிறைவேறாது என்ற நம்பிக்கையால் உண்ணாவிரதம் இருப்பது என்று அர்த்தமாகி விடும். கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதை அரசியலாக்க வேண்டாம் என அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறியுள்ளார். இதில் அரசியலுக்கு இடமில்லை.
இதற்காக முதல்வர் அலுவலகத்தில் நாளை (11-09-2007) முதல்வரை சந்திக்க தேதி வாங்கப்பட்டுள்ளது. அப்போது சுரேஷ் ராஜனும் அங்கு வரட்டும். முதல்வர் முன்னிலையில் இதற்கு தீர்வு காணலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications