பெண் மந்திரவாதி பத்மினிக்கு ஜாமீன்
திருநெல்வேலி:
குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதாக கூறி பல லட்சம் பணத்தை மோசடி செய்து கைதான போலி பெண் மந்திரவாதிக்கு நெல்லை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சியை சேர்ந்தவர் பத்மினி. இவர் பல்வேறு நபர்களிடம் செய்வினை வைப்பது, குடும்ப பிரச்சனைகளை தீர்க்க பரிகாரம் செய்வதாக கூறி பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட பத்மினி, ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, நெல்லை கோர்ட்டில் ஆவணங்களை தாக்கல் செய்து ஜாமீன் பெற அனுமதியளித்தது.
ஆனால் பத்மினி தன்னிடம் சொத்து ஆவணங்கள் இல்லை என்று உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பத்மினியிடம் சொத்துப் பத்திரங்கள் இல்லை என்று நோட்டரி பப்ளிக் உறுதியாணை வழங்கி நெல்லை முதலாவது நீதிமன்றத்தில் காட்டி ஜாமீன் பெறலாம் என அனுமதி அளித்தது.
இதையடுத்து பத்மினிக்கு நிபந்தனையின் அடிப்படையில் நெல்லை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.