தவ்ஹீத் ஜமாத் கட்சி அலுவகத்துக்கு தீ-இருவர் கைது
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டிணம்:
நாகை மாவட்டத்தில் முஸ்லீம் கட்சி அலுவலகத்திற்கு தீ வைத்த இருவர் கைது செய்ப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரம் அருகே உள்ளது தைக்கால் என்ற பகுதி. இப்பகுதியில் தவ்ஹீத் ஜமாத் கட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நள்ளிரவில் புகுந்த இருவர் திடீரென தீ வைத்து விட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த ஜாகீர், ஜக்காரியா ஆகியோர் தான் அலுவலகத்திற்கு தீ வைத்தவர்கள் என உறுதியானது.
இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications