ரயில்வே கோட்டம்: நாளை அதிமுகbr/போராட்டம்- மதிமுக ரயில் மறியல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
பாலக்காடு ரயில்வே கோட்டத்துடன் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பொள்ளாச்சியில் அதிமுக நடத்தும் கண்டன போராட்டமும், நாளை மறுதினம் மதிமுக சார்பில் ரயில் மறியலும் நடக்கிறது.
கிணத்துக்கடவு முதல் பொள்ளாச்சி வரையுள்ள 79 கிலோமீட்டர் ரயில் பாதையை கேரளாவுக்கு தாரை வார்த்து கொடுத்து சேலம் ரயில் கோட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசையும், தமிழகத்தில் ஆளும் திமுக அரசையும் கண்டித்து நாளை (18ம் தேதி) அதிமுக சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடக்கிறது.
நாளை மறுதினம் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் காலை 6 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இருந்து ஊர்வலமாக சென்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் நடக்கிறது.












Click it and Unblock the Notifications