ரன்வேயில் ஓடிய விமானம் மரத்தில்br/மோதி உடைந்து 88 பேர் பலி!
பாங்காக்:
தாய்லாந்தின் சுற்றுலாத் தளமான புக்கெட் தீவில், விமான நிலைய ரன்வேயில் இறங்கிய விமானம் நிலை தடுமாறு ஓடி மரங்களில் மோதி இரண்டாகப் பிளந்து விபத்துக்குள்ளானது. இதில் 88 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், தாய்லாந்தின் குறைந்த பட்ஜெட் விமான நிறுவனமான ஒன்-டூ-கோ நிறுவனத்திற்குச் சொந்தமான மெக்டோனால்ட்ஸ் டக்ளஸ்-82 ரக விமானம் 123 பயணிகளுடன் பாங்காக் விமான நிலையத்திலிருந்து புக்கெட் தீவுக்குக் கிளம்பியது.
இவர்களில் 78 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், 45 பேர் உள்ளூர்வாசிகள். இவ்ரகள் தவிர ஐந்து விமான ஊழியர்கள், 2 பைலட்டுகளும் விமானத்தில் இருந்தனர்.
விமானம் புக்கெட் வந்ததும், விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், ரன்வே ஈரமாக இருந்தது. ரன்வேயில் விமானம் இறங்கியபோது ஈரத்தன்மை காரணமாக வழுக்கிக் கொண்டு தாறுமாறாக ஓடியது.
வேகமாக ஓடிய விமானம் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் மரங்களில் மோதி இரண்டாகப் பிளந்தது. பின்னர் விமானம் வெடித்துச் சிதறியது.
இதையடுத்து உடனடியாக தீயணைப்புப் படையினர் தீயணைக்கும் பணியில் இறங்கினர். மீட்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டன. ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு விமான விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
விபத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் காயமடைந்தனர். 12 பேரைக் காணவில்லை என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் விமானம் தீயில் எரிந்து கருகி விட்டது. உயிர் தப்பியவர்கள் பலர் விமானத்தின் பின் பகுதியில் உள்ள அவசர காலப் பகுதி வழியாக கீழே குதித்துத் தப்பினர். இதில் கீழே விழுந்த பலருக்கு காயம் ஏற்பட்டது.
கன மழை பெய்து கொண்டிருந்த நிலையில் விமானம் தரையிறங்கியதே இந்த விபத்துக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications