மது குடிக்க பணம் தராத மனைவியை கொன்ற கணவன்
நாமக்கல்:
மது குடிக்க பணம் தராததால் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள ஒலப்பாலயத்தில் கூலி வேலை செய்துவருபவர் சண்முகம். இவரது மனைவி தமிழரசி. இவர்கள் இருவரும் கட்டிட கூலி வேலைக்கு செல்கின்றனர்.
சண்முகம் மது அருந்த அடிக்கடி பணம் கேட்டு மனைவியை தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அவர்கள் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுமாம். நேற்று அருவங்காடு பகுதிக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு கூலி வாங்கி வரும் போது சண்முகம், அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
ஆனால் வழக்கம் போல் அவரது மனைவி மறுத்துள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகறாறு ஏற்பட்டது. தான் குடிப்பதற்கு பணம் தராத ஆத்திரத்தில் இருந்த சண்முகம், மனைவி தமிழரசியை மட்டைப்பலகையால் தாக்கியுள்ளார்.
அதே இடத்தில் தமிழரசி இறந்து போனார். இதனால் சண்முகம் பயந்து ஓடிவிட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொலை செய்த சண்முகத்தை தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications