சாக்கடை மீனைப் பிடித்து சமைத்துச் சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, பேதி
சென்னை:
சென்னை அருகே நந்தம்பாக்கத்தில் சாக்கடையில் பிடித்த மீனை சாப்பிட்ட பீகார் மற்றும் ஒரிஸாவைச் சேர்ந்த 100 தொழிலாளர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
நந்தம்பாக்கம் பகுதியில் ஒரு ஐடி பூங்கா உருவாகி வருகிறது. இதன் கட்டுமானப் பணியில் பீகார், ஒரிஸா மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைவரும் அதே பகுதியில் மொத்தமாக தங்கியுள்ளனர். நேற்று அப்பகுதியில் உள்ள அடையாற்றில் ஓடும் சாக்கடை நீரில் மீன் பிடித்துள்ளனர். பின்னர் அதை சமைத்து சாப்பிட்டனர்.
சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அனைவருக்கும், வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 100 பேர் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்னர். அவர்களில் 60 பேர் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
சாக்கடை நீரில் பிடிக்கப்பட்ட மீன் என்பதாலும், அந்த மீன்கள் கெட்டுப் போனதாக இருந்ததாலும் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.