For Daily Alerts
Just In
தொழிலில் நஷ்டம் - லாரி அதிபர் தற்கொலை
மதுரை:
லாரி தொழிலில் நஷ்டம் மற்றும் அதிக கடன் சுமை காரணமாக மதுரையில் லாரி அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் லாரி தொழில் செய்து வருகிறார். இவர் லாரி வாங்க பிரபல வங்கியில் கடன் வாங்கியுள்ளார். லாரி தொழிலில் இவர் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை. இதனால் கடனாளியாகினார்.
மேலும், இவரது லாரி கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையிலிருந்து சென்னை செல்லும் போது விபத்தில் சிக்கி பலத்த சேதமடைந்தது. அதை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டது.
இதனால் மேலும் மனம் உடைந்தார் பாலமுருகன். மறுபக்கம் கடன் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்தனர். இதனால் விரக்தி அடைந்த பாலமுருகன் தற்கொலை செய்ய தீர்மானித்தார்.
இதையடுத்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 22:25 [IST]