For Daily Alerts
Just In
5வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
சேலம்:
மேட்டூர் அணை இந்த ஆண்டில் 5வது முறையாக நிரம்பியது.
மேட்டூர் அணை இந்த ஆண்டில் இதுவரை 4 முறை நிரம்பியிருந்தது. இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து நேற்று நள்ளிரவில் அணை மீண்டும் நிரம்பியது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 120.020 அடி நீர் இருப்பு உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 23 ஆயிரத்து 479 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 22:25 [IST]