ஒரு வழியாய் டி.ஆருக்கு பதவி தந்த கருணாநிதி
சென்னை:
திமுக கூட்டணியை விட்டு விலகப் போவதாகவும் மீண்டும் தனது லட்சிய திமுக கட்சியை தூசி தட்டி ரெடி பண்ணப் போவதாகவும் சவுண்டு விட்டுக் ெகாண்டிருக்கும் டி.ராஜேந்தர் தமிழ்நாடு மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜய்காந்த், சரத்குமார் என தனக்குப் பின்னால் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் வேகமாக போய்க் கொண்டிருக்க, எம்ஜிஆர் காலத்தில் அரசியலுக்கு வந்த டிஆர் இன்னும் கிளம்பிய இடத்தில் தான் நிற்கிறார்.
இதையடுத்து இனி திமுகவுடன் கூட்டணி கிடையாது, நாங்கள் யாருக்கும் பல்லக்கு தூக்க மாட்டோம். தேர்தலின் போது இனிமேல் யாருக்காகவும் பிரச்சாரத்தில் லதிமுக ஈடுபடாது என்று வீர வசனம் பேசினார் ராஜேந்தர்.
ஆனால் அடுத்த நாளே திமுகவுடன் கூட்டணி முறியவில்லை. லதிமுகவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்று திமுக உறுதி அளித்துவிட்டது என்று பேட்டி கொடுத்தார்.
இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
லதிமுக தலைவர் விஜய டி.ராஜேந்தருக்கு தமிழ்நாடு மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நியமனம் செய்து இன்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.