நடுரோட்டில் பெண்ணுடன் அடித்துப் புரண்ட பெண் கவுன்சிலர்!

Subscribe to Oneindia Tamil

தேவகோட்டை:

தேவகோட்டையில் காங்கிரஸ் பெண் கவுன்சிலரும் இன்னொரு பெண்ணும் நடுரோட்டில் அடித்துப் புரண்டனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகரசபை கவுன்சிலராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமாரி. இவரது வீட்டருகே வசிப்பவர் மங்கையர்கரசி.

இவர்களிடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல் நேற்றும் இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.

இருவரும் நடு ரோட்டில் கட்டிப் புரண்டு சண்டையிட்டனர்.
இருவரும் ஒருவர் தலைமுடியை இன்னொருவர் பிடித்துக் கொண்டு நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அப்பகுதி மக்கள் இருவரையும் பெரும்பாடுபட்டு பிரித்து விட்டனர்.

இதையடுத்து வசந்தகுமாரி தன்னை தாக்கியதாக கூறி மங்கையர்கரசி மேல்தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதன் பேரில் போலீசார் மங்கையர்கரசியை கைது செய்துள்ளனனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+