ராமாயணம் குறித்து என்னுடன் பொது மேடையில் விவாதிக்க அத்வானி தயாரா?-கருணாநிதி
சென்னை:
ராமர் குறித்து, ராமாயணத்தைப் படைத்த வால்மீகி சொன்னதை விட நான் தவறாக எதையும் சொல்லி விடவில்லை. வால்மீகியின் ராமாயணம் குறித்து பொது மேடையில் என்னுடன் விவாதிக்க அத்வானி தயாரா என்று முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமர் குறித்து நான் சொன்ன கருத்துக்களில் எந்த மாற்றமும் இல்லை. அதைத் திரும்பப் பெறும் பேச்சுக்கும் இடமில்லை.
ராமாயணத்தைப் படைத்த வால்மீகி சொன்னதை விட நான் தவறாக எதையும் சொல்லி விடவில்லை.
என்னை மன்னிப்பு கேட்கச் சொல்லும் அத்வானி, வால்மீகியின் ராமாயணத்தை முழுமையாக படித்து விட்டு என்னுடன் பொது மேடையில் விவாதம் செய்யத் தயாரா?
சேது சமுத்திரத் திட்டத்தின் நோக்கம் பாலத்தை இடிப்பதல்ல. இந்த திட்டத்தால் தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியா முழுவதும் பலனடையும். செழிப்படையும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
கடந்த நூறு ஆண்டுகளாக கனவாகவே இருந்த இந்தத் திட்டம் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதே எனது விருப்பம். அது பாலத்தை இடித்து முடிந்தாலும் சரி, இடிக்காமல் நிறைவேறினாலும் சரி.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுபவர்களின் நோக்கமும் பாலத்தை இடிக்க வேண்டும் என்பதல்ல. திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம்.
இந்தத் திட்டம் நிறைவேறினால் கப்பல்களின் பயண நேரம் வெகுவாக குறையும், கால விரையம் குறையும், செலவும் குறையும் என்பது நிபுணர்கள், பொருளாதார நிபுணர்களின் கருத்து என்றார் கருணாநிதி.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications