மாணவர்கள் 'எக்ஸ்டார மார்க்' பெற இணையதளம்!
நோய்டா:
மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு உதவுவதற்காக மத்திய அரசின் தேசிய கல்வி ஆய்வுக் கழகத்தின் (என்.சி.இ.ஆர்.டி) பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு www.extramarks.com என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
உ.பி. மாநிலம் நோய்டாவைச் சேர்ந்த எக்ஸ்ட்ராமார்க்ஸ்.காம் கல்வி நிறுவனம் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள், தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெறவும், கூடுதல் மதிப்பெண்கள் பெறவும் உதவியாக பல்வேறு டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன.
மாதிரிக் கேள்வித்தாள்கள் மற்றும் அதற்கான பதில்கள் அடங்கிய விரிவான வழிகாட்டியும் இதில் இம் பெற்றுள்ளது. மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்குரிய பதில்களைப் பெறவும் இதில் வசதி உள்ளது.
மேலும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்களுடன் கலந்துரையாடவும் இதில் வசதி உள்ளது. இதன் மூலம் இறுதித் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் பெற மிகவும் எளிதாக இருக்கும்.
இந்த இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி அலோக் பட்நாகர் இதுகுறித்துக் கூறுகையில், வகுப்பு வாரியாக, பாட வாரியாக, சாப்டர் வாரியாக கேள்வி வங்கியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதை அனைவரும் இலவசமாகவே பயன்படுத்தலாம்.
மேலும், மாணவர்ளின் சந்தேகங்களுக்குரிய பதில்களைத் தருவதற்காக மிகப் பெரிய ஆசிரியர் குழுவையும் நாங்கள் வைத்துள்ளோம்.
இப்படி ஒரு கல்வி இணையதளம், அதுவும் இலவசமாக இருப்பது எனக்கு தெரிந்து இது மட்டுமே என்றார்.
பூனம் சிங்கின் தலைமையிலான 45 பேர் கொண்ட குழு இந்த இணையதளத்தை நிர்வகிக்கிறது.












Click it and Unblock the Notifications