கரூரில் பிரபல ஷேர் புரோக்கர் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
கரூர்:
தொழில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் கரூரில் பிரபல ஷேர் புரோக்கர் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் வெண்ணைமலை பகுதியில் வசிப்பவர் பிரபல ஷேர் புரோக்கர் சதாசிவம்.
ஷேர் புரோக்கர் தொழில் ஈடுபட்டுவந்த சதாசிவத்திற்கு கடந்த சில நாட்களாக ஷேர் புரோக்கர் தொழிலில் திடீரென நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் மனம் விரக்தி அடைந்த சதாசிவம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதியுள்ள கடிதத்தில் எனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை, தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து வெங்கமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications