இனாம் வாங்கிக் குவித்த ஐஏஎஸ் அதிகாரி மதுரை கோர்ட்டில் ஆஜர்!
மதுரை:
மதுரையில் தீபாவளிக்கு இனாம் வாங்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பிடிபட்ட ஐஏஎஸ் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தமிழக அரசின் சமுக நலத்துறையில் உயர் பதவியில் இருந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரமணியம்.
கடந்த 2003ம் ஆண்டு, மதுரைக்கு வந்த அவர், அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி தீபாவளி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தினர்.
அப்போது சுப்ரமணியத்தின் அறையிலிருந்து தீபாவளி இனாமாக வசூலிக்கப்பட்ட ரூ. 1.50 லட்சம் பணம் பிடிபட்டது. இதையடுத்து சுப்ரமணியம் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த ஒட்டன் சத்திரத்தை சேர்ந்த கூட்டுறவு அதிகாரி ஜெகதீஷ்வரன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு மதுரை தலைமை குற்றவியல் நீதீமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரமணியமும், ஜெகதீஷ்வரனும் ஆஜரானார்கள்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அக்டோபர் 25 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications