6வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
மேட்டூர்:
இந்த ஆண்டு மேட்டூர் அணை திட்டமிட்டபடி ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறந்து விடப்பட முடியவில்லை. காரணம் அமையில் போதுமான தண்ணீர் இல்லாததால். ஒரு மாதம் தாமதமாக ஜூலை மாதத்தில்தான் அணை திறக்கப்பட்டது.
அதன் பிறகு மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக நல்ல நீர் வரத்து இருந்து வருகிறது. இதனால் கடந்த 3 மாதங்களில் 5 முறை நிரம்பி சாதனை படைத்தது மேட்டூர் அணை.
இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக மேட்டூர் அணைக்கு நல்ல நீர் வரத்து இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 44,489 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை மேட்டூர் அணை 6வது முறையாக நிரம்பியது. நீர்மட்டம் 120 அடியைத் தொட்டுள்ளது.
கடந்த 1940 மற்றும் 1959ம் வருடங்களில் 7 முறை மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. அந்த சாதனை இந்த ஆண்டு முறியடிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.












Click it and Unblock the Notifications