தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் சாஸ்திரி
மும்பை:
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரிய வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. அப்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார்.
இப்பதவியை முன்பு கபில்தேவ் வகித்து வந்தார். ஆனால், இந்திய கிரிக்கெட் லீகின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கபில்தேவை தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியிலிருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இடைக்காலத் தலைவராக அஜய் ஷ்ர்கே நயிமிக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ரவி சாஸ்திரி, கடந்த மே மாதம் வங்கதேசத்திற்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக பணியாற்றினார் என்பது நினைவிருக்கலாம்.
1981ம் ஆண்டு முதல் 1992 வரை கிரிக்கெட் விளையாடிய ரவி சாஸ்திரி 80-டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.