விபச்சாரத்தில் ஈடுபட்ட வங்கி மேலாளர் மனைவி கைது!

Subscribe to Oneindia Tamil


தஞ்சை:

தஞ்சாவூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட வங்கி மேலாளரின் மனைவி கைது செய்யப்பட்டார்.

தஞ்சை கரந்தை ராஜாராம் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி லதா. இவருக்கு பக்கத்து வீட்டில் உள்ள சில தவறானவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பின் காரணமாக லதா தஞ்சை மேலஅலங்கம் பாரதியார் நகர் சதீஸ் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்துள்ளார்.

இதுதவிர புரோக்கர்களை வைத்து பலருக்கும் பெண்களை சப்ளை செய்து பெரியளவில் விபச்சாரம் செய்து வந்துள்ளார்.

இவருக்கு புரோக்கராக சுதாகர் என்பவர் செயல்பட்டுள்ளார். பல ஆண்கள் அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து போவதை கண்டு சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் சோதனை செய்ததில் விபச்சாரம் செய்வது உறுதியானது. அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த லதா, சுதாகர், ஆகியோரை தஞ்சை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கைது செய்தார்.

வங்கி மேலாளர் மனைவி விபச்சாரம் செய்த தகவல் பலரது அதிர்ச்சியடைய செய்ததுடன் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+