டெம்போ மீது ரயில் மோதி ஒருவர் பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ரயில் வருவதைக் கவனிக்காமல் கடந்த டெம்போ வேன் மீது ரயில் மோதியது. இதில் வேன் டிரைவர் உடல் சிதறி பலியானார்.
நாகர்கோவிலிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று பிற்பகலில் திண்டுக்கல் அருகே வந்து கொண்டிருந்தது. குஜிலியம்பாறை அருகே ரயில் வந்தபோது, அப்பகுதியில் இருந்த ஆள் இல்லா ரயில்வே கிராசிங்கை வேகமாகக் கடந்தது.
அப்போது ரயில் வருவதைப் பார்க்காமல் ஒரு வேன் வேகமாக தண்டவாளததைக் கடக்க முயன்றது. அப்போது வேன் மீது ரயில் பயங்கரமாக மோதியது. இதில் வேன் தூள் தூளாக நொறுங்கி தூக்கி வீசப்பட்டது.
இதில் வேன் டிரைவர் முத்துக்கிருஷ்ணன் (31) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் பயணித்த முருகேசன், சந்திரேசகர் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
விபத்துக்குள்ளான இடத்தில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications