மார்க்சிஸ்ட் பேரூராட்சி தலைவர் பதவி நீக்கம்
திருவாரூர்:
திருவாரூரை அடுத்துள்ள பேரளம் பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருவாரூர் அடுத்துள்ளது பேரளம் பேரூராட்சி. இந்த பேரூராட்சியின் தலைவராக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் சித்ரா.
இப்பேரூராட்சியில் 12 உறுப்பினர்களின் உள்ளார். இந்த பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த 6 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதுதவிர கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சை சார்பாக தலா 2 உறுப்பினர்களும், அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் சார்பாக தலா 1 உறுப்பினரும் உள்ளனர்.
இந்த உறுப்பினர்கள் பேரூராட்சி தலைவர் சித்ரா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து, அது குறித்த மனுவை தஞ்சாவூர் பேரூராட்சி உதவி இயக்குனரிடம் கொடுத்தனர்.
அவர் பேரளம் பேரூராட்சி கூட்டத்தை நேரில் கூட்டத்தை கூட்டி ஆய்வு செய்த பின்பு அவர் இந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தார்.
அதன் பேரில் தமிழக அரசு பேரளம் பேரூராட்சி தலைவர் சித்ராவை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பேரூராட்சித் தலைவரை தமிழக அரசு பதவி நீக்கம் செய்துள்ளது அக்கட்சியினரை கடும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.