நிலாவில் சாய்பாபா - புட்டபர்த்தியில் பரபரப்பு
புட்டபர்த்தி:
நிலாவில் சாய்
பாபா தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டதால், புட்டபர்த்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்யசாய்பாபா ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில், சாய்பாபா, நிலாவில் தோன்றி அருளாசி வழங்குவார் என ஆசிரமத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.
மாலை 6.30 மணிக்கு சாய்பாபா, விஸ்வரூப விராத் தரிசனம் தருவார் என்று அந்த அறிவிப்பு கூறியது. இதையடுத்து பெரும் திரளான பக்தர்கள் அங்கு கூடத் தொடங்கினர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
புட்டபர்த்தி விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் இவர்கள் கூடி தரிசனத்தைக் காண காத்திருந்தனர். அந்த சமயத்தில் சாய்பாபாவும் அங்கு வந்தார். சாய்பாபா உள்பட அனைவரும் நிலவைப் பார்த்தபடி இருந்தனர். ஆனால் அறிவித்தபடி எந்த தரிசனமும் காணப்படவில்லை. குறிப்பாக நிலவே வரவில்லை.
இதையடுத்து அனைவரும் ஏமாந்து போனார்கள். அவர்களை ஆறுதல்படுத்துவது போல, இன்னொரு நாள் தரிசனம் தருவதாக கூறி விட்டு சாய்பாபா அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications