சச்சின், ஷாருக், ஹூசேன் கொடும்பாவி எரிப்பு
போபால்:
ஓவியர் எம்.எப். ஹூசேன், பாரத மாதாவை நிர்வாண கோலத்தில் வரைந்த ஓவியத்தைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகர் ஷாருக்கானின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.
மத்திய அமைச்சரும், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் போபாலில் இந்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
எம்.எப்.ஹுசேன் வரைந்த பாரத மாதாவின் நிர்வாணப் படத்தை பாராட்டியதன் மூலம் டெண்டுல்கரும், ஷாருக் கானும் தேசத் துரோகத்தை இழைத்து விட்டனர், இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டனர் என்று கூறி அவர்களின் கொடும்பாவிகளை பவார் கட்சித் தொண்டர்கள் எரித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், லண்டனில் இந்த ஓவியங்களை விற்றதன் மூலம் ஷாருக் கான் ரூ. 5 கோடி சம்பாதித்துள்ளார். மகாத்மா காந்தியின் படத்தை தலையில்லாமல் வரைந்து நாட்டையே அவமதித்து விட்டார் ஹூசேன்.
இந்த செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.












Click it and Unblock the Notifications