வருமானவரி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி, கன்னாட் பிளேஸ் பகுதியில் மயூர் பவன் என்ற அடுக்குமாடிக் கட்டடம் உள்ளது. இங்கு வருமான வரி அலுவலகம் உள்ளிட்ட பல நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன.
நேற்று காலை 5வது மாடியில் இருக்கும் வருமானவரி அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டது.
தகவல் அறிந்து 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தனர்.












Click it and Unblock the Notifications