ராகிங்: 8 ரகளை மாணவிகள் கைது
Subscribe to Oneindia Tamil
போபால்:
போபாலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஜூனியர் மாணவிகளை ராகிங் செய்த சீனியர் மாணவிகள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போபாலில் தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளான நீலம் கவுதம் மற்றும் பூஜா ஆகியோரை சீனியர் மாணவிகள் அறையில் அடைத்து வைத்து ராகிங் செய்துள்ளனர்.
இதுகுறித்து இருவரும் கடந்த 4ம் தேதி போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து ஜாய்ஸ் நீல் பின்டோ, ரோகினி ஓபராய், ஹீனா ஐசக், கேவல்பிரீத் கன்வர், நேஹா கண்ணா, தீப்தி நிர்கி, சுமனி வாலியா மற்றும் உபாசனா கோயல் ஆகிய 8 மாணவிகளை நேற்றிரவு போலீஸார் கைது செய்தனர்.
அதே பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் விஷால் சர்மா என்பவரை அந்த கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களான குனால் செள்த்ரி மற்றும் நீரஜ்குமார் ஆகியோர் ராகிங் செய்ததால் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications