சிறைக்குள் செல்போன்-கைதிகளிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
பாளையங்கோட்டை மத்திய சிறையில் மணலில் புதைக்கப்பட்டிருந்த செல்போன் தொடர்பாக 7 கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உள்பட 1,800 பேர் உள்ளனர். தண்டனை கைதிகள் உள்ள 1வது பிளாக் அறையில் செல்போன்கள் இருப்பதாக சிறை காவலர்களுக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து அங்கு சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு புதியரக செல்போன் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
செல்போனை கண்டெடுத்த சிறை காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த தண்டனை கைதிகள் 7 பேரிடம் சிறைதுறை கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன், ஜெயிலர் நிஜாமுதீன், மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications