பாக் துணை ராணுவ தளபதியானார் கியானி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் துணை ராணுவ தளபதியாக ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கியானி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தான் நாட்டின் அதிபராகவும், ராணுவத் தளபதியாகவும் முஷாரப் பதவி வகித்து வருகிறார். இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில் தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானவுடன் ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்து விடுவதாக உறுதி அளித்துள்ளார்.
தனக்கு பின்பு ராணுவ தளபதியாக பாகிஸ்தான் உளவுத்துறையின் முன்னாள் அதிகாரியான கியானி பொறுப்பு வகிப்பார் என்றும் முஷாரப் அறிவித்தார்.
இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அதிபர் முஷாரப் அபார வெற்றி பெற்றார். இருப்பினும் அவருடைய வெற்றியை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்.
இந் நிலையில் பாகிஸ்தானின் ராணுவ துணைத் தளபதியாக இன்று ஜெனரல் பர்வேஸ் கியானி பொறுப்பேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் முஷாரப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக தகமாக தீர்ப்பு வந்தால், அதன்பிறகே கியானி ராணுவ தளபதியாக்கப்படுவார் என்று தெரிகிறாது.
அப்படி இல்லாவிட்டால் ராணுவ தளபதி பொறுப்பை முஷாரபே தொடர்ந்து வகிப்பார்.












Click it and Unblock the Notifications