ராணுவத் தாக்குதலில் 13 விடுதலைப் புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் நடந்த மோதலில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அரண்களைத் தடுத்து முன்னேற விடுதலைப் புலிகள் முயன்றனர். அவர்களைத் தடுத்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
மன்னாரில் நடந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 3 ராணுவத்தினர் காயமடைந்தனர் என்றார்.
இதுதவிர அம்பாரையில் ஒரு விடுதலைப் புலி கொல்லப்பட்டார். போலீஸ் அதிரடிப்படையினர் அவரை சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் சண்டையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து ராணுவம் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக ஒரு செய்தி கூறுகிறது.












Click it and Unblock the Notifications