மனநிலை பாதித்த பெண்ணை கற்பழித்த சலவைத் தொழிலாளி!

Subscribe to Oneindia Tamil


தூத்துக்குடி:

தூத்துக்குடியில் மனநிலை பாதித்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த சலவைத் தொழிலாளியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி சமீர் வியாஸ் நகரை சேர்ந்தவர் மாதவன். கூலித் தொழிலாளி. இவரது தங்கை முருகேஸ்வரி. மனநிலை பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

மகேஸ்வரியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாடசாமி. சலவைத் தொழிலாளி. கடந்த 7ம் தேதி முருகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மாடசாமி அவரை வலுக்கட்டாயபடுத்தி பாலியல் பாலத்காரம் செய்தார். அதன் பிறகு அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்த தகவல் மாதவனுக்கு தெரியவந்தது. ஆனால் அவர் வெளியில் தெரிந்தால் தனக்குத்தான் அவமானம் என்று கருதி அமைதியாக இருந்து விட்டார். இதற்கிடையை நேற்று மாடசாமிக்கு சொந்தமான பசு ஒன்று மாதவனின் வீட்டிற்குள் நுழைந்து விட்டது.

இதையடுத்து அவர் மாட்டை விரட்டுவதற்காக மாதவனின் வீட்டிற்குள் சென்றார். அப்போது அங்கிருந்த மாதவன் உன்னை போல் உன் மாடும் நுழைகிறதே என்று கூறி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மாடசாமியை தாக்கினார்.

காயமடைந்த அவர் தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்து விட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதே போல் மாதவனும் தனது தங்கையை மாடசாமி பாலியல் பாலத்காரம் செய்து விட்டதாக போலீசில் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து மாடசாமி தலைமறைவாகி விட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+