சிறைக் காவலர் ஊதிய உயர்வு-அரசு பரிசீலனை

Subscribe to Oneindia Tamil


திருநெல்வேலி:

தமிழகத்தில் உள்ள சிறைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சிறைத்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நெல்லை, பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

போலீஸ் மற்றும் சிறைத்துறை பணியாளர்களுக்கு தினக்கூலி, சலவை கூலியிலிருந்த வித்தியாசம் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாருக்கும், சிறைத்துறை காவலர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் ரூ. 300 வித்தியாசம் உள்ளது.

போலீசாருக்கு வழங்கும் அடிப்படை சம்பளத்தை போல் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற சிறைத்துறை காவலர்களின் கோரிக்கையினை தமிழக அரசு பரீசிலிக்கும்.

விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் கடந்த பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை ரூ.73 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2500 கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு 7 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் பின்னர் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

டிசம்பர் மாதம் 6ம் கட்டமாக 28,000 ஏக்கர் இலவச நிலம் நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+