நேருக்கு நேர் மோதவிருந்த சென்னை, டெல்லி விமானங்கள்
டெல்லி:
சென்னையிலிருந்து டெல்லி சென்ற இந்தியன் விமானமும், டெல்லியிலிருந்து கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானமும் நேருக்கு நேர் மோதும் பயங்கர விபத்திலிருந்து தப்
பியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையிலிருந்து இன்று காலை டெல்லி சென்ற இந்தியன் விமானம் காலை 10.30 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தது.
அந்த விமானம் தரையிறங்க இருந்த அதே ரன்வேயில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் புறப்பட தயாராகி ரன் வேயில் ஓடிக் கொண்டிருந்தது.
இதனால் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அபாயம் எழுந்தது.
ஆனால் சட்டென சுதாரித்த சென்னை விமானத்தின் விமானி, தரையிறங்கிக் கொண்டிருந்த விமானத்தை திசை திருப்பி மீண்டும் பறக்க ஆரம்பித்தார். இதனால் இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
ஜெட் ஏர்வேஸ் விமானம், விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு முறைப்படி தகவல் தெரிவிக்காமல் கிளம்ப முயன்றது பின்னர் தெரிய வந்தது.
சென்னை விமானத்தில் பிருந்தா காரத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.
முதலில் இந்த நிகழ்வை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் பிறகு நடந்ததை ஒப்புக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications