நெல்லை: கேலி செய்த வாலிபரை கத்தியால் குத்திய கூர்க்காக்கள்
திருநெல்வேலி:
பாளையங்கோட்டையில் ஒயின் ஷாப்பில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்து உதைக்க கூர்க்காக்கள் அவரது மண்டையை உடைத்தனர்.
பாளை மார்கெட்டில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு எதிரே ஒரு மதுக்கடை உள்ளது. நேற்று இரவு அங்கு நான்கு வழிச் சாலையில் பணிபுரியும் கூர்க்காக்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். பெரியபாளையம் தெருவைச் சேர்ந்த கொத்தனார் முத்துகிருஷ்ணன் என்பவரும் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
இந் நிலையில் முத்துகிருஷ்ணனும் அவரது நண்பர்களும் கூர்க்காக்களை கேலி செய்துள்ளனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர்.
சிறிது நேரம் கழித்து முத்துகிருஷ்ணன் தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சுமார் 10 கூர்க்காக்கள் வழிமறித்து தாக்கினர்.
தலையில் கத்தியால் குத்தியதாகவும் தெரிகிறது. இதில் முத்துகிருஷ்ணன் நடுரோட்டில் மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாளை போலீசார் விரைந்து வந்தனர். போலீசை கண்டதும் கூர்க்காக்கள் ஓட்டம் பிடித்தனர். அதில் பிரதீப்குமார், ரமேஷ், பிரகாஷ், ஜெயபால்சிங் ஆகிய 4 பேரை மட்டும் போலீசாரிடம் பிடிபட்டனர்.












Click it and Unblock the Notifications