For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனவரி 23ம் தேதி தியாகராஜர் ஆராதனை விழா!

By Staff
Google Oneindia Tamil News


திருவையாறு:

தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் வரும் ஜனவரி 23ம் தேதி தியாகராஜர் ஆராதனை விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவையாற்றில் ஒவ்வொரு வருடமும் தியாகராஜர் ஆராதனை விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் இசைக் கலைஞர்கள் வருவது வழக்கம்.

வரும் வருடம் 161வது விழா என்பதால் அது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவையாறு பாலகணபதி தொடக்கப் பள்ளியில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் சகோதரர் ரெங்கசாமி மூப்பனார் தலைமை வகித்தார். செயலாளர் குன்னக்குடி வைத்த்தியநாதன் மற்றும் ஏகே பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


161வது ஆண்டு ஆராதனை விழாவை வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி நடத்துவது என்றும், 27ம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடத்தி இசை அஞ்சலி செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X