சுனாமி: மீனவர்களுக்கு கூடுதல் நிவாரண உதவி
சென்னை:
சுனாமியால் பாதிக்க
ப்பட்ட தமிழக மீனவர்களுக்கு ரூ. 120.35 கோடி மதிப்பிலான கூடுதல் நிவாரண உதவித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் மொத்தம் 40,794 மீனவர்கள் பயனைடவார்கள்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு மீனவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்கள், உயிர் காக்கும் உடைகள், ரீசார்ஜ் செய்யக் கூடிய வகையிலான மின் விளக்குகள், ஐஸ் பெட்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ரூ. 9.4 கோடி மதிப்பிலான முதலுதவிப் பெட்டிகள் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
ரூ. 59.10 லட்சம் மதிப்பிலான கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம், செஸ் ஆகியவற்றுக்கான விளையாட்டு சாதனங்களை விநியோகிக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications