For Daily Alerts
Just In
தமிழகத்தில் நாளை ரம்ஜான்
சென்னை:
தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமைக் காஜியார் அறிவித்துள்ளார்.
வளைகுடா நாடுகளில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் சில பகுதிகளிலும் நேற்றே ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமைக் காஜியார் முகம்மது சலாகுதீன் அயூப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷவ்வால் மாதப் பிறை நேற்று தென்படவில்லை. எனவே ரம்ஜான் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதேபோல டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் இதர பகுதிகளிலும் நாளை ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
Story first published: Saturday, December 15, 2007, 21:34 [IST]