For Daily Alerts
Just In
தீவிரவாதம்: சு.சுவாமியின் 8 யோசனைகள்!!
சென்னை:
தீவிரவாதிகள் இந்தியாவைக் குறி வைத்துத் தாக்குவதைத் தடுக்க 8 அம்ச யோசனையை ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவை தீவிரவாதிகள் குறி வைத்துத் தாக்குவதைத் தவிர்க்க 8 யோசனைகளை நான் முன் வைத்துள்ளேன். இதுகுறித்து விரைவில் வெளியாகப் போகும் எனது நூலில் விரிவாகத் தெரிவித்துள்ளேன்.
தீவிரவாதத்தைத் தடுக்க மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முழுமையாகத் தோல்வி அடைந்து விட்டது.
தீவிரவாதத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கைகளை எடுக்க அரசு தயங்குகிறது என்று கூறியுள்ளார் சுவாமி.
Story first published: Saturday, December 15, 2007, 21:29 [IST]