பாட்டி கழுத்தை நெரித்து நகை-பணம் கொள்ளை!
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
அண்டை வீட்டில் வசிக்கும் பாட்டியின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அறந்தாங்கி பெரியகடை வீதியில் வசிப்பவர் சந்தான லட்சுமி. இவரது கணவர் சீனிவாச நாயுடு இறந்து விட்டார். இதனால் சந்தான லட்சுமி தனியே வசித்து வருகிறார்.
இவரது அண்டை வீட்டில் வசிக்கும் மணிகண்டன் சந்தான லட்சுமியிடம் ரூ. 1,000 கேட்டுள்ளார். ஆனால், பணம் தர பாட்டி மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் பாட்டியின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கியுள்ளார். அவர் மயங்கியவுடன் அவர் அணிந்திருந்த நகைகள், பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார்.












Click it and Unblock the Notifications