கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார் வருண் காந்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும், பாஜக இளைய தலைவர்களில் ஒருவருமான வருண் காந்தி சாலை விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தெற்கு டெல்லியில் உள்ள பாரதி நகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் வருண் காந்தி தனது காரில் போய்க் கொண்டிருந்தார். அப்போது அதை திசையில் சென்று கொண்டிருந்த காரும், வருணின் காரும் மோதுவது போல உரசிக் கொண்டன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. போலீஸார் விரைந்து வந்து வருண் காருடன் மோதுவது போல சென்ற காரில் இருந்தவர்களைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களை போலீஸார் அனுப்பி விட்டனர்.
இது எதிர்பாராமல் நடந்த சம்பவம்தான் என்று வேறு சதிச் செயல் எதுவும் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications