ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், காரில் கொடைக்கானலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்களது கார் உடுமலைப்பேட்டை அருகே உள்ள முக்கோணம் என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் ஸ்டீபன், ராஜு, சிறுமி அபீனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 3 பேர் சிறுவர்கள். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications