மனைவியை 20 இடங்களில் வெட்டி கொன்ற கணவன் !
Subscribe to Oneindia Tamil
கரூர்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் மனைவியை 20 இடங்களில் வெட்டிக் கொன்றார்.
கரூர் மாவட்டம் பழையஜெயங்கொண்டம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் வீரமலை. இவரது மனைவி கமலவள்ளி. இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன. ரஞ்சித் குமார், செந்தில் குமார், ராஜ்குமார் என மூன்று மகன்கள் உள்ளனர்.
கமலவள்ளியின் நடத்தை மீது வீரமலைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இந் நிலையில் மனைவியை தனது வாழை தோட்டத்திற்கு அழைத்து சென்ற வீரமலை அவரை அரிவாளால் வெறி கொண்டு வெட்டினார். தப்பியோடிய கமலவள்ளியை விரட்டி விரட்டி வெட்டியதில் அவருக்கு 20 இடங்களில் வெட்டு விழுந்தது.
இதில் அந்த இடத்திலேேய கமலவள்ளி இறந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications