பேச்சுவார்த்தைக்கு தயார்-இலங்கை கூறுகிறது
கொழும்பு: விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக இலங்கை அரசு திடீரென அறிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பல்வேறு தடைகை உருவாக்கி, நிபந்தனைகளை விதித்து அதை முடங்கச் செய்துள்ள இலங்கை அரசு புலிகளின் விமான-கரும்புலிகள் கூட்டுத் தாக்குதலையடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (கரும் புலிகள் நடத்திய மிகப் பெரிய தற்கொலைப் படை தாக்குதலாக இது கருதப்படுகிறது)
வெளியுறவுத்துறை செயலாளர் பபித கொஹனா கூறுகையில், அனுராதபுரம் விமானப் படை தளத்தின் மீது நேற்று நடந்த தாக்குதலில் 13 பாதுகாப்புப் படையினரும் 20 புலிகளும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும் கூட பிரச்சனையை பேசித் தீர்ப்பது என்ற அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
நேற்றைய தாக்குதல் வெறும் ஒரு ஊசி குத்து மாதிரி தான். இதனால் பெரிய அளவில் பாதுகாப்புப் படைகளுக்கு எந்த சேதமும் இல்லை.
பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளோம். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு முன் வருவது அவசியம். பேச்சுவார்த்தையில் பங்கேற்க அரசு தயார். ஆனால், புலிகள் அதற்கு தயாராக இருப்பது போல தெரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications