அனைத்து மதத்தினரும் திருமணங்களை பதிவு கட்டாயமாகிறது
டெல்லி: அனைத்து மதத்தினரும் கல்யாணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இன்று பிறப்பித்த உத்தரவில், திருமணங்களை பதிவு செய்வது கட்டாயமானது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம்.
கட்டாய திருமணப் பதிவு இந்து சமூகத்தினருக்கு மட்டுமல்ல, அனைத்து சமுதாயத்திற்கும் பொருந்தும்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு, அனைத்து மாநில அரசுள், யூனியன் பிரதேச அரசுகள் கட்டாயம் அமல்படுத்த வேண்டும். இதற்காக அவர்களுக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
இந்த கால கட்டத்திற்குப் பின்னர் எக்காரணம் கொண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது. அதற்குள் கட்டாயத் திருமணப் பதிவு தொடர்பான நடவடிக்கைகளை அனைத்து அரசுகளும் எடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் ஏற்கனவே இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவை மேற்கு வங்க மாநில அரசு படு கேஷுவலாக எடுத்துக் கொண்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது என்று தங்களது உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications