பெண் எஸ்ஐயுடன் 2வது திருமணம்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
மேட்டூர்: பெண் சப்-இன்ஸ்பெக்டரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு முதல் மனைவியை கழற்றிவிட்ட இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெண் எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார்.
மேட்டூரை சேர்ந்த வனிதாவுக்கும் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கத்துரைக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இந் நிலையில் வனிதா மேட்டூர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், தன்னை விரட்டி விட்டு பனமரத்துபட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ள உஷாராணியை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து பெண் சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி பனமரத்துபட்டியிலிருந்து ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். பிறகு அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
இந் நிலையில் இன்ஸ்பெக்டர் தங்கத்துரையை கோவையில் இருந்து ராமநாபுரத்துக்கு இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்ய
உஷா ராணி மூலம் தங்கதுரைக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications