பெண் தாசில்தாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி
நாகர்கோவில்: சட்டவிரோதமாக கருங்கல் ஏற்றிச் சென்ற மினி லாரியை மறித்த பெண் தாசில்தாரை லாரியை ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
விளவங்கோடு தாசில்தாராக உள்ளவர் பார்வதி. இவர் முள்ளூர்துறை, ராமன்துறை பகுதிகளில் நடந்து வரும் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்டி வரும் பணிகளை பார்வையிடுவதற்காக பார்வதி சென்றார்.
முள்ளூர்துறை பகுதியில் சென்றபோது அந்த வழியாக கருங்கல் ஏற்றி வந்த மினி லாரியை வழி மறித்தார். டிரைவரிடம் கருங்கல் பாரம் ஏற்றி செல்ல முறையான அனுமதி உள்ளதா, என்று பார்வதி கேட்டார்.
ஆனால் மினி லாரி டிரைவரிடம் அனுமதியில்லை. இதையடுத்து லாரியை வேகமாகக் கிளப்பி பார்வதியை மோதி தள்ளிவிட்டு ஓட்டிச் சென்றார்ய
இதில் பார்வதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரூபன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி பைங்குளம் நெடுவிளை வீடு பகுதியை சேர்ந்த சிவராஜ்குமார் என்ற அந்த டிரைவரைக் கைது செய்தார்.
கரைவேட்டிகள் உதவியோடு சட்டவிரோதமாக மணல், கல் அள்ளிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் அதைத் தடுக்கும் அதிகாரிகளை கொல்லவும தயங்குவதில்லை. தமிழகத்தில் இதற்கு முன் பல தாசில்தார்கள் லாரி ஏற்றி கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எளிதில் ஜாமீனில் வந்துவிடலாம் என்பதால் இந்தக் கொலைகளைச் செய்ய டிரைவர்களும் தயக்கம் காட்டுவதில்லை.












Click it and Unblock the Notifications